Monday 25 February 2013

‘வ‘-‘வௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘வ‘- வரிசையில் பழமொழிகள்

1.    வசந்தத்தில் உழை; கோடையில் உண்.
2.    வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்
3.    வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணி, அட்டிகையை வைத்து வட்டியை கட்டுவான்.
4.    வட்டிக்கு ஆசை; முதலுக்கு கேடு.
5.    வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
6.    வடக்கே கருத்தால் மழை வரும்.
7.    வண்டு ஏறாத மலர் இல்லை
8.    வண்ணான் கையில் மாற்று.
9.    வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன?
10.    வணங்கின முள் பிழைக்கும்.
11.    வதந்தி ஒரு தீ
12.    வதந்தியை நம்பாதே!
13.    வரவு எட்டணா. செலவு பத்தணா!
14.    வரவுக்குத் தகுந்த செலவு
15.    வருந்தினால் வாராதது இல்லை
16.    வருமுன் காப்பாய்
17.    வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்
18.    வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
19.    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
20.    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
21.    வலியவன் வெட்டியதே வாய்க்கால்
22.    வலியை உணர்ந்தவன் வலியை அறிவான்
23.    வழவழத்த உறவைக்காட்டிலும் வைரம் பாய்ந்த பகை நன்று.
24.    வழியில் கிடக்கிற கொடரியை எடுத்து கால் மேல் போட்டுக்கொள்வானேன்?
25.    வளரும் காய் பிஞ்சிலே தெரியும்
26.    வளரும் பயிர் முளையிலே தெரியும்
27.    வளவனாயினும் அளவறிந்து அளித்துண்

‘வா‘- வரிசையில் பழமொழிகள்

1.    வாக்கு என்னும் கடன்
2.    வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை; போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை.
3.    வாக்கு கெட்ட மாட்டை போக்குல விட்டுத் திருப்பு.
4.    வாக்கு கொடுக்காதே! கொடுத்தால் காப்பாற்று.
5.    வாங்குவதைப் போலிருக்க வேண்டும் கொடுப்பதும்
6.    வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு.
7.    வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை.
8.    வாதம் ஊதி அறி; வேதம் ஓதி அறி.
9.    வாதம் வயோதிகருக்கு; பிடிவாதம் இளையவர்களுக்கு.
10.    வாய் நல்லதானால் ஊர் நல்லது
11.    வாழ்க்கை ஒரு போராட்டம்
12.    வாழ்வும் தாழ்வும் சில காலம்
13.    வாழ்வும் வீழ்வும் வாயாலே!
14.    வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாற்போல
15.    வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு
16.    வாய்ச் சொல் வீரனடி
17.    வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
18.    வாய்மையே வெல்லும்
19.    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்
20.    வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
21.    வாழ்கிறதும் கெடுகிறதும் நம் வாயினால்தான்.
22.    வாழ்வும் தாழ்வும் சில காலம்.
23.    வாழு, வாழ விடு.
24.    வாளினும் கூரியது நாவு.
25.    வானத்து மேலே எறிஞ்ச கல்லு அப்படியே நிற்காது.

‘வி‘- வரிசையில் பழமொழிகள்

1.    விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
2.    விடியும்முன் கும்மிருட்டு
3.    விதி எப்படியோ மதி அப்படி.
4.    விதி என்று உண்டென்றால் விதிவிலக்கு என்றும் உண்டு
5.    விதியை மதியால் வெல்
6.    விதி வலியது
7.    வியாதிக்கு மருந்துண்டு; விதிக்கு மருந்தில்லை.
8.    விரலுக்கேத்த வீக்கம்
9.    விருந்தும் மருந்தும் மூன்று நாள்
10.    விருப்பத்தால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
11.    விரும்பிச் செய்தால் கரும்பாய் இனிக்கும்
12.    விரும்பியது கிட்டா, கிடைத்தது விரும்பு.
13.    விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று மளைக்குமா?
14.    வில்லேந்தியவன் எல்லாம் வீரன் அல்ல.
15.    வில்வப்பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார் பசி போக.
16.    விழித்த முகம் சரியில்லை
17.    விளக்கின் அடியில் இருள் மண்டும்
18.    விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலம்
19.    விள்க்கெண்ணெயைத் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்.
20.    விளையும் பயிர் முளையிலே தெரியும்
21.    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

‘வீ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வீட்டிலே எலி, வெளியிலே புலி.
2.    வீட்டிலே புலி, வெளியிலே எலி.
3.    வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
4.    வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்.

‘வெ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்
2.    வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
3.    வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
4.    வௌக்கெண்ணெய் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.
5.    வெளுத்ததெல்லாம் பாலாகுமா? கருத்ததெல்லாம் நீராகுமா?
6.    வெறுங்கை முழம் போடுமா?
7.    வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல

‘வே’ - வரிசையில் பழமொழிகள்

1.    வேண்டாத மனைவி கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம்
2.    வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்
3.    வேலியே பயிரை மேய்ந்தால்?
4.    வேலியிலே போன ஓணானை வேட்டிக்குள்ளே விட்டதுபோல
5.    வேலைக்குத் தகுந்த வேஷம் போடு

‘ல‘&‘லௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ல‘ வரிசையில் பழமொழிகள்
1. லங்கணம் பரம ஔஷதம்

‘ர‘ - ‘ரௌ‘ வரிசையில் பழமொழிகள்

ரா‘ - வரிசையில் பழமொழிகள்
1.    ராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராச திசையில் கெட்டவனுமில்லை.
2.    ராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.
3.    ராமனைப் போல ராசா இருந்தால் அனுமானைப்போல செவகனும் இருப்பான்.

 ரு‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ருசி கண்ட பூனை உரிக்கு உரி தாவுமாம்

ரெ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ரெண்டு கையும் தட்டினால்தான் ஓசை வரும்.
2.    ரெண்டு மலை ஒண்ணு சேர்ந்தாலும்..... ரெண்டு முலை எப்போதும் ஒண்ணு சேரவே சேராது....
3.    ரெண்டும் ரெண்டும் நாலு

‘ய‘ - ‘யௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ய‘ - வரிசையில் பழமொழிகள்
 

1.    யதார்த்தவாதி வெகு ஜன விரோதி
 

யா‘ - வரிசையில் பழமொழிகள்

1.    யாருமில்லாத ஊரில் அசுவமேத யாகம் செய்தானாம்
2.    யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

3.    யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும்; பூனை கறுத்தால் என்ன பெறும்?
4.    யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே!
5.    யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
6.    யானைக்கும் அடி சறுக்கும்
7.    யானையைத் தேடி குடத்துக்குள் கையை விட்டது போல

‘ம‘&‘மௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ம‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மகம் ஜெகத்தை ஆளும்; பரணி தரணி ஆளும்
2.    மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
3.    மட்டான போஜனம் மனதுக்கு மகிழ்ச்சி
4.    மடமைக்கு மருந்தில்லை
5.    மடியில் கனம், வழியில் பயம்.
6.    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற்போல
7.    மண்டையில் எழுதி மயிரால் மறைத்து இருக்கிறது
8.    மண்டையுள்ளவரை சளி போகாது
9.    மண் தோண்டுபவனுக்கு இடமும், மரம் வெட்டுபவனுக்கு நிழலும் தரும்
10.    மண் பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை
11.    மண்ணைத் தின்றாலும் மறையத் தின்ன வேண்டும்
12.    மணல் அணை கட்டுவதா?
13.    மணலை கயிராய் திரிப்பது
14.    மதியாதார் வாசலை மிதியாதிருப்பது நல்லது
15.    மதியும் அது; விதியும் அது.
16.    மதில் மேல் பூனை போல.
17.    மது உள்ளே மதி வெளியே.
18.    மந்திரத்தால் மாங்காய் விழுமா?
19.    மந்திரி இல்லா யோசனையும், ஆயுதம் இல்லாச் சேனையும் விழும்.
20.    மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
21.    மந்திரிக்கும் உண்டு மதிகேடு
22.    மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
23.    மயிர் சுட்டுக் கரி ஆகுமா?
24.    மயிரிழையில் உயிர் பிழை
25.    மயிரைக்கட்டி மலையை இழு, வந்தால் மலை, போனால் மயிரு.
26.    மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுபவனுக்கு இடமும் கொடுக்கும்.
27.    மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
28.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
29.    மருந்துக்கு மோளச் சொன்னா நிறைய [மண்ணுல] மோளுவா
30.    மருந்தும் விருந்தும் மூணு நாளைக்கு!
31.    மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
32.    மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே
33.    மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்
34.    மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்துவான்
35.    மலை முழுங்கி மஹாதேவனுக்கு கதவு அப்பளம்
36.    மலை முழுங்கிக்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
37.    மலையளவு  சாமிக்குக் கடுகளவு கற்பூரம்.
38.    மலையே விழுந்தாலும் தலையால் தாங்க வேண்டும்
39.    மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்
40.    மலையைப் பிளக்க சிற்றுளி போதும்
41.    மழலைச் செல்வமே ஏழைகளின் செல்வம்
42.    மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் தரும்
43.    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு
44.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
45.    மருந்தே இல்லாத நோயை பொறுத்தே ஆகவேண்டும்
46.    மலையத்தனை சுவாமிக்கு தினையத்தனை பூ.
47.    மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
48.    மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை
49.    மறப்போம், மன்னிப்போம்
50.    மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி.
51.    மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
52.    மன்னுயிரும் தன்னுயிர்போல நினை
53.    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
54.    மனம் கொண்டது மாளிகை.
55.    மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை
56.    மனம் போல் வாழ்வு
57.    மனம் விரும்புவதை எல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதை எல்லாம் கேட்க நேரிடும்
58.    மனதறியப் பொய் உண்டா?
59.    மனத்தில் பகை; உதட்டில் உறவு.
60.    மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கினிலே
61.    மன முரண்டிற்கு மருந்தில்லை
62.    மனைவி இனியவளானால் கணவன் இனியவன் ஆவான்

மா‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மா பழுத்தால் கிளிக்காம்; வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
2.    மாட்டுக்கு கொம்பு, மனிதனுக்கு நாக்கு.
3.    மா£டம் இடிந்தால் கூடம்
4.    மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
5.    மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா?
6.    மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.
7.    மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
8.    மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி.
9.    மாமியார் மெச்சின மருமகளும் இல்லை; மருமகள் மெச்சின மாமியாரும் இல்லை.
10.    மாமியார் வீடு மஹா சௌக்கியம்
11.    மாமியாரும் ஒருவீட்டு மருமகளே!
12.    மாவில் இருக்கும் மணம், கூழில் இருக்கும் குணம்
13.    மாவுக்கேத்த பணியாரம்
14.    மாரடித்த கூலி மடி மேலே.
15.    மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ்சரி
16.    மாரியல்லாது காரியமில்லை
18.    மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்
19.    மாற்றனுக்கு இடம் கொடேல்
20.    மானம் பெரிதா? உயிர் பெரிதா?
21.    மானைக் காட்டி மானைப் பிடிப்பார்

 மி‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது
2.    மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?
3.    மின்னல் அடிக்காமல் இடி விழுந்தது போல
4.    மின்னுக்கெல்லம் பின்னுக்கு மழை

 மீ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மீகாமன் இல்லாமல் மரக்கலம் ஓடாது
2.    மீதூண் விரும்பேல்
3.    மீன் வலையில் சிக்கும்; திமிங்கலம் சிக்குமா?
4.    மீன் வித்த காசு நாறது.

மு‘ - வரிசையில் பழமொழிகள்

1.    முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
2.    முகஸ்துதியும் ஒரு வசையே
3.    முகத்தில் கரி பூசுவது
4.    முகத்துக்கு முகம் கண்ணாடி
5.    முகம் நல்லா இல்லேன்னா கண்ணாடி என்ன செய்யும்?
6.    முங்கி முங்கி குளித்தாலும் காக்கை அன்னம் ஆகாது.
7.    முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
8.    முட்டையிட்ட கோழிக்குத் தெரியும் வலி
9.    முடியுள்ள சீமாட்டி கொண்டை முடிப்பாள்
10.    முத்துக் குளிக்க நினைப்பவன் மூச்சை அடக்க வேண்டும்
11.    முத்தால் நத்தை பெருமைப் படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
12.    முதல் கோணல் முற்றும் கோணல்
13.    முதல் தவறை மன்னிப்போம்
14.    முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
15.    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
16    முப்பது வருடம் வாழ்ந்தவெனும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவெனும் இல்லை.
17.    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
18.    முயற்சி திருவினையாக்கும்
19.    முயன்றால் முடியாதது இல்லை
20.    முருங்கை பருத்தால் தூணாகுமா?
21.    முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்.
22.    முலை கொடுத்தவள் மூதேவி; முத்தம் கொடுத்தவள் சீதேவி.
23.    முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
24.    முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுக் கஞ்சியே மேல்
25.    முள்மேல் விழுந்த சேலையைப் பார்த்துதான் எடுக்க வேண்டும்.
26.    முள்ளில்லாமல் ரோஜாவா?
27.    முள்ளை முள்ளால் எடு.
28.    முள்ளுக்கு மனை சீவி விடுவார்களா?
29.    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
30.    முற்றும் நனைந்தவனுக்கு ஈரம் ஏது?
31.    முன் ஏர் போன வழி, பின் ஏர்.
32.    முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
33.    முன் நேரம் கப்பல்காரன்; பின் நேரம் பிச்சைக்காரன்.
34.    முன் வைத்த காலை பின் வைக்காதே!
35.    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
36.    முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது.
37.    முன்னேறு பின்னேறு

 மூ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மூடமூட ரோகம்
2.    மூடன் உறவு அபாயம்
3.    மூத்தது மோழை; இளையது காளை.
4.    மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்
5.    மூலிகை அறிந்தால் மூவுலகையும் ஆளலாம்

 மெ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மெத்தப் படித்தவன் கடைக்குப்போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
2.    மெத்தப் படித்தவன் சுத்த பைத்தியக்காரன்
3.    மெத்தப் பேசுவான் மிகுந்த பொய்யன்
4.    மெய் சொல்லி கெட்டவனுமில்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
5.    மெய் மூன்றாம் பிறை; பொய் பூரண சந்திரன்.
6.    மெல்ல பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்

 மே‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மேருவைச் சேர்ந்த காகமும் பொன் நிறம்
2.    மேலே எறிஞ்ச கல்லு கீழே வந்துதானே ஆக வேண்டும்.
3.    மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்

மொ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே!
2.    மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்.

மௌ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மௌனம் கலக நாசினி
2.    மௌனம் சம்மதம்
3.    மௌனம் மலையை சாதிக்கும்

‘ப‘-‘பௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ப‘- வரிசையில் பழமொழிகள்

1.    பக்கச் சொல் பதினாயிரம்
2.    பக்தி உண்டானால் முக்தி உண்டாகும்
3.    பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே!
4.    பகிர்ந்த வேலை பளுவாயிராது.
5.    பகுத்தறியாமல் துணியாதே! படபடப்பாகச் செய்யாதே!
6.    பகையாளியை உறவாடிக் கெடு
7.    பகைவர் உறவு புகை எழும் நெருப்பு.
8.    பங்குனி என்று பருப்பதுமில்லை; சித்திரை என்று சிறுப்பதுமில்லை.
9.    பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
10.    பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?
11.    பசி உள்ளவன் ருசி அறியான்
12.    பசி வந்தால் சுகி வேண்டாம்; நித்திரை வந்தால் பாய் வேண்டாம்.
13.    பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
14.    பசி ருசி அறியாது
15.    பசித்தார் பொழுதும் போகும்; பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போகும்.
16.    பசித்துப் புசி, ருசித்துக் குடி
17.    பசியாமல் இருக்க மருந்து தருகிறேன், பழஞ்சோறு போடு என்கிறான்.
18.    பசு கருப்பென்றால் பாலும் கருப்பாகுமா?
19.    பசுத்தோல் போர்த்திய புலி
20.    பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
21.    பசுவிலும் ஏழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
22.    பசுவை அடித்து செருப்பை தானம் கொடுத்தானாம்.
23.    பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமா?
24.    பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்
25.    பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்கவல்ல குட்டி
26.    பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
27.    பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்.
28.    பட்டிக்காட்டுக்குச் சிகப்புத் துப்பட்டி பீதாம்பரம்
29.    பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறான்
30.    பட்டுச் சட்டைக்குள் பீதாம்பரம்
31.    பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம்
32.    பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்; காக்காசு கந்தையில் ஓடி உலாவும்.
33.    படிக்கிறது திருவாய் மொழி; இடிக்கிறது பெருமாள் கோயில்.
34.    படுத்துவாரெல்லாம் படுத்த, இந்த கடுத்த வாயுமில்லா கடிக்கு
35.    படுப்பது குச்சு வீட்டில்; கனவு காண்பது மச்சு மாளிகை.
36.    படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
37.    படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.
38.    படையிருந்தால் அரணில்லை
39.    பண்ணப் பண்ண பலவிதம்
40.    பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
41.    பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
42.    பணத்தைப் பார்ப்பதா? பழமையைப் பார்ப்பதா?
43.    பணம் இல்லாதவன் பிணம்
44.    பணம் உண்டானால் மணம் உண்டு.
45.    பணம் குலம் அறியும். பசி கறி அறியும்.
46.    பணம் நமக்கு அதிகாரியா? நாம் பணத்திற்கு அதிகாரியா?
47.    பணம் பத்தும் செய்யும்
48.    பணம் பந்தியிலே கு(ல)ணம் குப்பையிலே!
49.    பணம் பாதாளம் வரை பாயும்
50.    பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
51.    பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்
52.    பத்து பேருக்கு பல் குச்சி, ஒருவனுக்கு தலைச் சுமை.
53.    பத்து பேரோட பதினோராவது ஆளாக இருக்க வேண்டும்
54.    பதவி வர பவிசும் வரும்
55.    பதறாத காரியம் சிதறாது
56.    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழனும்
57.    பந்திக்கு இல்லாத வாழக்காய் பந்தலில் கட்டித் தொங்குது.
58.    பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து.
59.    பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும், இலை பொத்தல் என்கிறான்.
60.    பம்மாத்துக் குளம் அழிஞ்சு போச்சு பயக்கள கூப்பிடு மீன் பிடிக்க
61.    பரணியிலே பிறந்தால் தரணி ஆழ்வான்
62.    பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்
63.    பரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
64.    பருவத்தே பயிர் செய்.
65.    பல்லாக்கு ஏற யோகம் உண்டு; உன்னி ஏற ஜீவன் இல்லை
66.    பல்லார் முனியப் பயனில சொல்லுவான், எல்லாரும் எள்ளப்படும்.
67.    பல்லு போனால் சொல்லு போச்சு
68.    பல்லு முறியத் தின்ன எல்லு முறிய வேலை செய்!
69.    பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
70.    பல மனிதர்கள்; பல ருசிகள்.
71.    பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
72.    பழக்கம் வழக்கத்தை மாற்றும்
73.    பழகப் பழக பாலும் புளிக்கும்
74.    பழந்தேங்காயில்தான் எண்ணெய்
75.    பழம் தின்று கொட்டை போட்டவன்
76.    பழம் நழுவி பாலில் விழுந்தது
77.    பழம் பழுத்தால், கொம்பிலே தங்காது.
78.    பழம் பெருச்சாளி
79.    பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்
80.    பழுத்த ஓலையைப்பார்த்து குருத்தோலை சிரித்ததாம்
81.    பழுத்த பழம் கொம்பில் நிற்குமா?
82.    பழுதுபடாது முழுதாய்த் திரும்புவது
83.    பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
84.    பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மேட்டிலே இருந்தா அக்கா!
85.    பறையர் தெருவில் வில்வ மரம் முளைத்தது போல
86.    பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஓராதோ?
87.    பன்றி குட்டி போட்டது போல
88.    பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
89.    பன்றிபின் செல்லும் கன்றும் மலம் தின்னும்
90.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
91.    பனிப் பெருக்கில் கப்பல் ஓட்டுவது போல
92.    பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
93.    பனி பெய்து குடம் நிறையுமா?
94.    பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?
95.    பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல
96.    பனையால் விழுந்தவனை பாம்பு கடித்தது போல
97.    பனையின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் என்றே நினைப்பார்கள்

 பா‘- வரிசையில் பழமொழிகள்

1.    பாசமற்றவன் பரதேசி
2.    பாடப் பாட ராகம்
1.    பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை
2.    பாடுபட்டால் பலனுண்டு
3.    பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .
4.    பாம்பின் கால் பாம்பறியும்
5.    பாம்பு கடிச்சி படக்குன்னு போக
6.    பாம்புக்குப் பால் வார்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும்.   
7.    பாம்பென்றால் படையும் நடுங்கும்
8.    பாம்பை பாம்பு கடிக்காது
9.    பாவம் ஓரிடம், பழி ஓரிடம்.
10.    பாவி போன இடம் பாதாளம்
11.    பாய் மரம் இல்லா மரக்கலம் போல
12.    பாயுற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னது போல
13.    பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
14.    பார்க்க மறுப்பவன் பெருங்குருடன்; கேட்க மறுப்பவன் வெறும் செவிடன்.
15.    பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி
16.    பார்வையில் இல்லாதவன் மனதிலும் நில்லான்
17.    பாராத உடைமை பாழ்
18.    பால் பசுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்
19.    பாலைக் குடித்தவனுக்கு பாலேப்பம்; கள்ளை குடித்தவனுக்கு கள்ளேப்பம்.
20.    பாலை வனச் சோலை
21.    பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
22.    பாலும் வெள்ளை; மோரும் வெள்லை.
23.    பாலுமாச்சு; மருந்துமாச்சு.
24.    பானகத் துரும்பு

  பி‘- வரிசையில் பழமொழிகள்

1.    பிச்சை எடுத்தும் சத்துருவின் குடியைக் கெடு
2.    பிச்சை போட்டு கெட்டவன் உண்டா?
3.    பிச்சைக்கு மூத்தது கச்சவடம்
4.    பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு பாப்பிள்ளையா?
5.    பிரிவே சரிவு
6.    பிள்ளை ஒன்று பெறாதவன் உள்ள அன்பை அறியான்
7.    பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
8.    பிள்ளை பெறப் பெறப் ஆசை, பணம் சேரச் சேர ஆசை.
9.    பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்காப் போச்சு.
10.    பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்ததாம்
11.    பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டினாற்போல
12.    பிறப்பிலும் இறப்பிலும் அனைவரும் சமம்
13.    பிறவிக் கவி
14.    பிறவிக் குணம் மாறாது
15.    பின்னே என்பதும், பேசாமல் இருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.

  பீ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பீலி பெய்யினும் அச்சிறுகும்

பு‘- வரிசையில் பழமொழிகள்

1.    புகழ் இழந்தவன் பாதி இறந்தவன்
2.    புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி
3.    புத்திமான் பலவான் ஆவான்
4.    புதியவனை நம்பி பழையவனை கை விடாதே!
5.    புலி பசிச்சாலும் புல்லைத் தின்னாது
6.    புலி பதுங்குவது பாய்வதற்கே
7.    புலி வந்த கதை போல்
8.    புலி வாலை பிடித்த கதை
9.    புலிக்குப் பிறந்து நகம் இல்லாமல் போகுமா?
10.    புலிக்கு வாலாவதைவிட எலிக்கு தலையாவது மேல்.
11.    புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.
12.    புளிய மரத்தில் ஏறினவன் பற்கூசினால் இஅறங்கி வருவான்

பூ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
2.    பூ விற்ற காசு மணக்குமா? நாய் விற்ற காசு குரைக்குமா?
3.    பூமியைப் போல பொறுமை வேண்டும்
4.    பூசப் பூசப் பொன் நிறம்
5.    பூசனிக்காய் எடுத்தவனை தோளிலே தெரியும்
6.    பூவுக்குள் புயல்
7.    பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
8.    பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
9.    பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போச்சுன்னு நினைத்ததாம்

பெ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பெட்டிப் பாம்பாய் அடங்கு
3.    பெண் என்றால் பேயும் இரங்கும்
3.    பெண் பிறந்தபோதே புருஷன் பிறந்திருப்பான்
4.    பெண் புத்தி பின் புத்தி
5.    பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
6.    பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
7.    பெண்ணின் கோணல், பொன்னிலே நிமிரும்
8.    பெருங்காயம் வைத்த பண்டம்
9.    பெருமாள் இருக்கும் வரையில் திருநாளும் இருக்கும்
10.    பெருமையும் சிறுமையும் வாயால் வரும்
11.    பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சித்தப்பன்
12.    பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வது போல
13.    பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

பே‘- வரிசையில் பழமொழிகள்
1.    பேச்சில் ராவணன், பின்னர் கும்பகர்ணன்.
2.    பேச்சுக் கற்ற நாய் வேட்டைவ்கு ஆகாது
3.    பேசப் பேச எந்த பாஷையும் வரும்
4.    பேசப் பேச மாசு அறும்
5.    பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை
6.    பேசுமுன் நன்கு ஆலோசி
7.    பேசுர பேச்சில அஞ்சு மாசப் பிள்ளையும் வழுகி விழுந்திரும்
8.    பேய் சிரித்தாலும் ஆகாது; அழுதாலும் ஆகாது.
9.    பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏற வேண்டும்
10.    பேர் இல்லா சந்நதி பாழ்; பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
11.    பேராசை பெரு நஷ்டம்
12.    பேனைப் பெருமாளாக்காதே!

  பை‘- வரிசையில் பழமொழிகள்

1.    பைய மென்றால் பனையையும் மெல்லலாம்

பொ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பொங்கின பால் பொயப்பால்
2.    பொங்கும் காலம் புளி; மங்கும் காலம் மாங்காய்.
3.    பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.
4.    பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லி வீழ்ந்தவனும் இல்லை.
5.    பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது.
6.    பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
7.    பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்
8.    பொய் நின்று மெய்யை வெல்லுமா?
9.    பொய்யான நண்பனைவிட மெய்யான எதிரி மேல்.
10.    பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்கும்.
11.    பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
12.    பொறாமைத்தீ தன்னையே அழிக்கும்
13.   பொறி வென்றவனே அறிவின் குருவாம்   
14.    பொறுத்தார் பூமியாழ்வார், பொங்கினார் காடாள்வார்
15.   பொறுமை அருமருந்து
16.    பொறுமை கடலினும் பெரிது
17.    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
18.   பொன் ஆபரணத்தைக் காட்டிலும் புகழாரம் பெரிது
19.    பொன் குடத்துக்குப் பொட்டு எதற்கு?
20.    பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல

‘போ‘- வரிசையில் பழமொழிகள்
1.    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
2.    போரோட திங்கிற மாட்டுக்குப் பிடுங்கிப்போட்டு கட்டுமா?
3.    போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
4.    போன ஜுரத்தை புளி இட்டு அழைத்தது போல
5.    போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்

‘ந‘-‘நௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ந‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நக்குண்டார் நாவெழார்
2.    நகமும் சதையும் போல; உடலும் உயிரும் போல.
3.    நகத்தால் கிள்ள வேண்டியதை கோடாரியால் வெட்டுகிறான்
4.    நஞ்சு நாலு கலம் வேணுமா?
5.    நஞ்சு பிழிந்த சேலை.
6.    நஞ்சு மரமானாலும் நட்டவர் வெட்டார்.
7.    நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி; குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி.
8.    நட்டத்துக்கு ஒருவன்; நயத்துவ்கு ஒருவன்.
9.    நட்டுவன் பிள்ளைக்கு கொட்டிக் காட்ட வேண்டுமா?
10.    நட்பு காலத்தைத் தேய்க்கும்
11.    நடக்க அறியாதவ்னுக்கு நடு வீதி காத வழி.
12.    நடந்த பிள்ளை தவழுதாம் தாயார் செய்த புண்ணியத்தாலே!
13.    நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
14.    நடு ஊரில் நச்சு மரம் பழுத்தற்று
15.    நண்டு கொழுத்தால் வளையில் இராது; தண்டு கொழுத்தால் தரையில் இராது.
16.    நண்டைச் சுட்டு நரியை காவல் வைப்பதா?
17.    நத்தையின் வயிற்றில் முத்து
18.    நம் குடுமி அவன் கையில்
19.    நம்பினாரை நட்டாற்றில் விடலாமா?
20.    நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
21.    நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டா?
22.    நமன் எடுத்துப் போகும்போது நழுவி விழுந்த ஜீவன்
23.    நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உறவுக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்
24.    நயத்திலாவது, பயத்திலாகாது.
25.    நரி கொழுத்தென்ன? காஞ்சீரம் பழுத்தென்ன?
26.    நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.
27.    நரி முன்னே நண்டு குட்டிக் கரணம் போட்டதாம்
28.    நரி வால் கொண்டு கிணற்றின் ஆழம் பார்க்கலாமா?
29.    நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.
30.    நரிக்குட்டிக்கு ஊளையிட பழக்க வேண்டுமா?
31.    நரிக்கு கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம்.
32.    நரியூரை விட்டு புலியூருக்குப் போனேன்; புலியூர் நரியூர் ஆயிற்று.
33.    நரை திரை இல்லை; நமனும் அங்கில்லை.
34.    நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
35.    நல்ல சேவைக்கு நல்ல பரிசு
36.    நல்ல பொருளை எறியாதே; தேவையெனத் திரியாதே.
37.    நல்ல மரத்தில் புல்லுருவி
38.    நல்ல மாட்டுக்கு ஒரு சோடு
39.    நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் சாப்பிட்டான்
40.    நல்ல வேளையில் நாழிப் பால் கறவாத்து கன்று செத்து கலப் பால் கறக்குமா?
41.    நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
42.    நல்ல நூல் நல்ல நண்பன்
43.    நல்ல பாம்பு ஆடியது கண்டு நாக்குப் பூச்சி ஆடியது
44.    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
45.    நல்லவரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
46.    நல்லவன் என்று பெயரெடுக்க நாள் செல்லும்
47.    நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும், கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
48.    நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
49.    நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாத்து போகிற வழியே போகிறது.
50.    நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
51.    நல்லாரை நாவழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்
52.    நல்லிணக்கம் அல்லது அல்லல்படுத்தும்
53.    நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்
54.    நலம் இல்லாத செல்வம் வளமில்லாத வாழ்வு
55.    நன்மை கடைப்பிடி.
56.    நன்றும் தீதும் பிறர் தர வாரா
57.    நன்றே செய், அதுவும் இன்றே செய்
58.    நனைத்துச் சுமக்கலாமா?
59.    நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்கும் சேதம்

நா‘--- வரிசையில் பழமொழிகள் 
  1. நா அசைய நாடே அசையும்.
  2. நாக்கிலே சனி
  3. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
  4. நாக்கு மேலே பல்லுப் போட்டுப் பேசாதே!
  5. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேசவல்ல குட்டி
  6. நாடறிந்த பார்ப்பனுக்கு பூணூல் அவசியமா?
  7. நாடு ஒன்றி வாழில் கேடு ஒன்றும் இல்லை
  8. நாம் ஒருவருக்கு கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்
  9. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்
  10. நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைத்த கிளாக்காய் போல.
  11. நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்.
  12. நாய் கொண்டு போன பானையை யார் கொண்டு போனால் என்னா?
  13. நாய் சந்தைக்குப் போனது போல
  14. நாய் சமுத்திரம் போனாலும் நக்கித்தான் குடிக்கும்
  15. நாய் சிங்கத்துக்கு பட்டம் கட்டியது போல
  16. நாய் பட்ட பாடு தடி அறியும்
  17. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  18. நாய் வித்த காசு குரைக்காது.
  19. நாய் வேஷம் போட்டா குறைத்துதான் ஆகனும்
  20. நாய்க்கு ஏன் முழுத் தேங்காய், நடு வீட்டில் உருட்டவா?
  21. நாய்க்கு கடிவாளம் போட்டது போல
  22. நாய்க்குத் தெரியுமா கொக்கு பிடிக்க?
  23. நாய்க்குப் பருத்திக் கடையில் என்ன வேலை?
  24. நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
  25. நாயும் தன் நிலத்தில் மிடுக்கு
  26. நாயை எதிரே வைத்துக்கொண்டு நாம் சாப்பிடுவது போல்
  27. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  28. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் விடுவது போல்
  29. நாயைக் கொஞ்சினால் முகத்தை நக்கும்
  30. நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.
  31. நாலாறு கூடினால் பாலாறு.
  32. நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில் சோறு
  33. நாவடக்கம் கற்றவன் நல்லதனைத்தும் கற்றவன்
  34. நாவெனும் கூரிய வாள்
  35. நாவுக்கு இசைந்தது பாவுக்கு இசையும்
  36. நாழி அரிசி ச் சோறுண்டவன் நமனுக்ஷிகு உயிர் கொடான்
  37. நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
  38. நாள் செய்வது நல்லார் செய்யார்.
  39. நாற்பது வயதில் நாய்க் குணம்
  40. நாறும் மீனை பூனை பார்த்தது போல
  41. நான் பிடித்த முயலுக்கு மூணு கால்.

நி‘--- வரிசையில் பழமொழிகள்
 
  1. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்
  2. நித்திய கண்டம் பூரண ஆயுசு
  3. நித்தியங் கிடைக்குமா அம்மாவாசை சோறு?
  4. நித்திரை சத்துரு
  5. நித்திரை சுகம் அறியாது
  6. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
  7. நிலவுக்கும் களங்கம் உண்டு
  8. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
  9. நிழலுடன் துவந்த யுத்தம்
  10. நிறை குடம் தளும்பாது
  11. நிறையக் கேள், குறைவாகப் பேசு!
  12. நின்ற மரம் போனால் நிற்கின்ற மரம் நெடு மரம்
  13. நின்ற வரையில் நெடுஞ்சுவர்; விழுந்த அன்று குட்டிச் சுவர்.
  14. நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போயிற்று

நீ‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
2.    நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது
3.    நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
4.    நீர் உயர நெல்லும் உயரும்
5.    நீர் என்று நினைத்தது நெருப்பாய் முடிந்தது
6.    நீர் போனால் மீன் துள்ளுமா?
7.    சிர் மேல் எழுத்து போல
8.    நீரில் குமிழி சரீரம்
9.    நீரிலும் நெருப்பிலும் நுழைவது
10.    நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.
11.    நீலிக்கு கண்ணீர் இமையிலே!
12.    நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக!
2.    நுணலும் தன் வாயால் கெடும்
3.    நுனிக் கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவதா?

நூ‘ ---வரிசையில் பழமொழிகள்

1.    நூல் இல்லாமல் மாலை தொடுப்பது
2.    நூல் கற்றவனே மேலவன்
3.    நூலளவேயாகும் நுண்ணறிவு
4.    நூற்றுக்கு மேல் ஊற்று; ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப்பெருக்கு.
5.    நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நெடியாரைக் குறியாரை ஆற்றில் அறியலாம்
2.    நெய் முந்தியோ? திரி முந்தியோ?
3.    நெய்க் குடத்தை எறும்பு மொய்த்ததைப் போல
4.    நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
5.    நெருஞ்சி முள் தைத்தாலும் இருந்து பிடுங்க வேண்டும்
6.    நெருப்பை கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.
7.    நெருப்பைச் சிறியது என்று முந்தானையில் முடியலாமா?
8.    நெருப்பில்லாமல் புகையுமா?
9.    நெருப்பின் அருமை குளிரில் தெரியும்; செருப்பின் அருமை வெயிலில் தெரியும்.
10.    நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா?
11.    நெருப்பு நெருப்பை அணைக்கும்
12.    நெருப்புப் பந்தலில் மெழுகு பொம்மை ஆடுமா?
13.    நெருப்பும் அரசனும் நெருங்காதவரை நண்பர்கள்
14.    நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும்

நே‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நேற்று உள்ளார் இன்று இல்லை
2.    நேர்மையான முகமே உண்மையான சிபாரிசு
3.    நேரம் சரியில்லை என்றால் பருகும் நீரே எமனாகும்
4.    நேருக்கு நேர் போராடு

நை‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நைடதம் புலவர்க்கு ஔடதம்.

நொ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நொடியில் தந்தவன் இருமுறை தந்தவன்
2.    நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
3.    நொறுங்கத் தின்றால் நூறு வயசு

நோ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.
2.    நோய் ஒரு பக்கம் இருக்க சூடு ஒரு பக்கம் போட.
3.    நோய் கொண்டார் பேய் கொண்டார்.
4.    நோய்க்கு இடம் கொடேல்.
5.    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
6.    நோயாளிக்கு ஆசை காட்டியது போல
7.    நித்திரை சுகம் அறியாது